Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தும் வெயிலில் குளுகுளு மழை! – 11 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (13:06 IST)
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்பன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே வருவதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது, இந்நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் திருச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் பகுதிகளில் 104 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments