Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையிலிருந்து தமிழகம் வந்த 47 மீனவர்கள்! – உறவினர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (12:49 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 47 மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் படகுகளையும் பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் மோடி இலங்கை அரசுக்கு கடிதமும் எழுதினார். இந்நிலையில் சமீபத்தில் அவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி விடுவிக்கப்பட்ட 47 மீனவர்கள் விமானம் மூலமாக கொழும்பிலிருந்து தமிழகம் அனுப்பப்பட்டனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments