Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழகத்தில் 12வது தடுப்பூசி முகாம்! – 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (08:38 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை குறைக்க தமிழக அரசின் 12வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் 12வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. தமிழக அரசிடம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுவரை 77.02 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்கு பிறகு இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments