Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா : மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க தமிழக முதல்வர் புதிய அறிவிப்பு !

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (19:17 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது. அதனால் கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,  கொரோனாவால் பாதிக்காமல் இருக்கவேண்டி  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க  முதலமைச்சர் புது அறிவிப்ப்புகள் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரையும் அவரது குடும்பத்தினரையும் பார்ப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் உரிய அனுமதி வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்புடன் இணைந்து சமூக ஆர்வலர்களும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல்  1 மணி வரை மட்டுமே அனுமதி; முன்னர் இருந்த 2:30 மணிவரையிலான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments