Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மாவட்டங்களில் கனமழை! அடுத்த 3 நாட்களுக்கும் தொடரும்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (13:32 IST)
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments