Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமை ரம்ஜான்: நாளை பள்ளி விடுமுறை ரத்து

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (22:36 IST)
"தமிழகத்தில் ரம்ஜான் :பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படும் என்றும் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது வரும் சனிக்கிழமை தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் சனிக்கிழமை தான் ரம்ஜான் பண்டிகை என்பது உறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை பள்ளிகள் விடுமுறை என்று ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் அறிவித்திருந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை விடுமுறை என அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளையும் தமிழக, புதுச்சேரி அரசுகள் வெளியிட்டுள்ளன
 
இதனையடுத்து நாளை வழக்கம்போல் அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் .மூன்று நாட்கள் விடுமுறை என நினைத்து பலரும் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்தும், கிளம்ப உள்ள நிலையில் இந்த விடுமுறை ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments