Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி! மன அழுத்தம் காரணமா?

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (19:39 IST)
கடலூரை சேர்ந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக காவல்துறையில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. பணிச்சுமை மற்றும் உயரதிகாரிகளின் டார்ச்சர் ஆகியவையே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த சவிதா மற்றும் அவரது கணவர் சத்தியசீலன் ஆகிய இருவரும்  கடலுார் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சவீதா நேற்று திடீரன தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது சவித அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
 
அதிக பணிச்சுமை காரணமாகவும், தன்னை உயரதிகாரிகள் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சவீதா கூறியுள்ளார்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். சவீதா தற்கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments