மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (19:41 IST)
தமிழகத்தில் மின்  நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழக மின்வாரியம்  மாநிலத்தில் சுமார் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதன் மூலம் ரூ.2.222 கோடி வீடுகள் பயனடைந்து வருகின்றன.

இதன் மூலம் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்குத் தமிழக அரசு மானியமாக வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் சலுகையைப் பெறத் தகுதியான நபர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.

ஆதார் இல்லாதவர்கள், வேறு 137 ஆவணங்களை அளிக்கலாம் என்றும், விரைவில் ஆதார் எண்ணுடன் மின் அட்டை இணைக்கப்பட உள்ளதாகக தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments