Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிரமடையும் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Advertiesment
தீவிரமடையும் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:03 IST)
தமிழக மாநிலம் முழுவதும் நடைபெறும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள் சங்கத்துக்கு தமிழ்நாடு காஸ்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. 
 

 




காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் மணல் லாரி தெரிவித்துள்ளனர்.
 
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
சென்னை எழும்பூர் மற்றும் செண்ட்ரல் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
 
தஞ்சை, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியலில் ஈடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் மதுகுடிப்போர் பந்த்: கட்டிங் போட்டாலும், கர்நாடக சரக்கை போடாதே!