Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் - நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:52 IST)
கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
ஏப்ரல் 27-ந் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்-நெல்லை இடையே  இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 
 
அதேபோல் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ந்தேதி மே மாதம்5,12,19,26 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 இந்தக் கோடைகால சிறப்பு ரயில்களை தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே துறை அறிவுறுத்துள்ளது. மேலும் இந்த ரயிலின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கெஜ்ரிவால் கைது குறித்து பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு..! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!!

நான் அதிபர் ஆனால் ரஷியா- உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன்: டொனால்ட் டிரம்ப்

நீட் தேர்வுக்கான வினாத்தாள் 2 மணி நேரத்திற்கு முன்பு தான் தயாரிக்கப்படும்: மத்திய அரசு

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்டு குடும்பமே பலியான சோகம்! – அதிர்ச்சி வீடியோ!

மெத்தனால் நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments