Publish Date: Thu, 20 Apr 2023 (07:31 IST)
Updated Date: Thu, 20 Apr 2023 (07:33 IST)
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அந்த பொது தேர்வு முடிவு அடைய உள்ளது. இதனை அடுத்து நாளை முதல் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு 9லட்சத்து 7,089 பேர் எழுதி வருகின்றனர். இன்றுடன் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவடையதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த பணி மே 3ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் புறப்படுகிறது.
மேலும் மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Siva
Publish Date: Thu, 20 Apr 2023 (07:31 IST)
Updated Date: Thu, 20 Apr 2023 (07:33 IST)