Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தைப்பூச திருவிழா! திருச்செந்தூரில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா!

Prasanth Karthick
புதன், 24 ஜனவரி 2024 (08:59 IST)
நாளை முருகபெருமானுக்கு உகந்த தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாளை தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு அஸ்திரதேவர் தீர்த்தவாரி நிகழ்வும், 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தைப்பூசத்திற்கு பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன் தயாரிப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments