Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு நாள் நான் சத்ரியன்...இனிமேல் சாணக்கியன் : டி.ராஜேந்தர் அதிரடி

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (13:04 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் பலருக்கு முதல்வர் கனவு வந்து, கட்சி ஆரம்பித்து வருகின்றனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால், விஜய், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் அரசியல் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அரசியலில் அவ்வப்போது தலைகாட்டி வரும் டி.ராஜேந்தரும் தற்போது மீண்டும் முழுவீச்சில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.

வரும் 28ஆம் தேதி தனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்கவுள்ளதாகவும், இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த தன்னை இனிமேல் அனைவரும் சாணாக்கியனாக பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். வரும் 28ஆம் தேதி அப்படி என்னதான் அறிவிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments