Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் நடிச்சா.. அரசியல் எப்போ? - ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (12:19 IST)
அரசியலில் நுழைவதற்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், திடீரென புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
நடிகர் ரஜினிகாந்தின் பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அதே ரசிகர்கள் தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் எனவே அதிகம் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அந்நிலையில்தான், கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். 
 
தற்போது அவர் ஷங்கரின் ‘2.0’ மற்றும் ரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். காலா படம் விரைவில் வெளியாகும் நிலையில் இருக்க, கிராபிக்ஸ் பணி காரணமாக 2.0 படம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
 
அதற்கிடையில் கமல்ஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, மதுரையில் மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார். எனவே, அரசியலில் வேகமாக செயல்பட வேண்டிய சூழலில் ரஜினி இருக்கிறார். அந்நிலையில்தான், நேற்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சென்னையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது, கட்டிடத்தை பலப்படுத்திவிட்டு அரசியலை தொடங்குவோம் எனக் கூறியிருந்தார்.
 
அவரிடமிருந்து அதிரடி அரசியல் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் போது, ரஜினியின் புதிய பட அறிவிப்பு நேற்று வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
 
சன் பிக்சர்ஸ் எனில் கண்டிப்பாக பிரம்மாண்ட படமாகத்தான் உருவாகும். எப்படியும், படம் முடிய ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களாகும். அதுவரை ரஜினி தீவிர அரசியலில் இறங்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டதால், அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments