சுஷ்மா சுவராஜ் பிரதமர் பதவியை தட்டிப்பறித்த மோடி: ப.சிதம்பரம்

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (18:24 IST)
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ப.சிதம்பரம், 2014ஆம் சுஷ்மா சுவராஜ் பிரதமராகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறித்து தெரிவித்துள்ளார். அதில், சுஷ்மா சுவராஜ்தான் 2014ஆம் ஆண்டில் பிரதமராகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
2009 - 2014ஆம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் அப்போதே பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார். ஆனால், 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி தோல்வியை கண்டனர். 
 
அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது பணிகளை சிறப்பாக செய்து வருவகிறார். உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள்தான் தேவை என்று ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments