Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பிற்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (13:08 IST)
சென்னை ஐகோர்ட் அளித்த பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது  

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை மீட்டு திரும்ப கொண்டு வந்த நிலையில் திடீரென சிலை திருட்டு வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. ஆனால் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் இந்த வழக்குகளை பொன். மாணிக்கவேல் அவர்களே விசாரிப்பார் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையிலும் அவர் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது இந்த மனுவை சற்றுமுன் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பொன் மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments