Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகையிலை பொருட்களுக்கு தடை: அரசாணை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (18:34 IST)
குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக நடமாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  இந்த நிலையில் குட்கா பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
 
இதனை அடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது .  இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று புதிய உத்தரவை  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது 
 
இதனை அடுத்து தமிழ்நாடு அரசு விரைவில் இது குறித்த அரசாணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.. பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

இவங்க அடங்க மாட்டாங்க போல! மீண்டும் சென்னை விமானம் மீது லேசர் ஒளி! - தொடரும் விஷமம்!

மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

அடுத்த கட்டுரையில்
Show comments