Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையிலேயே காத்திருக்குது சூப்பர் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
திங்கள், 15 ஏப்ரல் 2024 (09:15 IST)
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து குளிர்வித்தும் வருகிறது.



கடந்த சில வாரங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி செய்தியாக ஆங்காங்கே கோடை மழையும் பெய்து நிலத்தை குளிர்வித்து வருகிறது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று காலை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments