Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடிக்கு காது கேளாதோர் கருவி: மாணவர்கள் அதிரடி போராட்டம்!

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (18:09 IST)
பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதை அடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு அதற்கு செவிகொடுக்காமல் உள்ளது.
 
மாணவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிகொடுக்காமல் இருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காதுகேளாதோர் கருவி அனுப்பும் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
 
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும் பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் இதில் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் இந்த போராட்டங்கள் போலீஸ் தடியடியால் கலைக்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், செவிசாய்க்காத அரசுக்கு காது கேளாதோர் கருவி அனுப்பும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தபால் மூலம் அந்த கருவியை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து போராட்ட களத்துக்கு வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments