Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவன் கைது

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (12:54 IST)
சென்னை மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.  விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள், குளிக்கும் போது அதே கல்லூரியில் பயிலும் ஆந்திராவை சேர்ந்த மாணவன் திருட்டுத்தனமாக தனது செல்போனில் படமெடுத்துள்ளான்.
 
இதனையடுத்து மாணவிகள் நடந்த சம்பவத்தைப் பற்றி விடுதி வார்டனிடம் கூறியுள்ளனர். தாம் மாட்டிக் கொண்டோம் என்பதையறிந்த மாணவன் கல்லூரியில் இருந்து தப்பித்து சென்றுள்ளான். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் காணாமல் போன மாணவனை கைது செய்த போலீஸார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றப் புகாரில் சிக்கிய மாணவனை, தனியார் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments