Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைதியை குலைக்க ஸ்டாலின் முயற்சி! – அதிமுக அமைச்சர் குற்றசாட்டு!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (13:29 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் பேரணி என்ற பெயரில் தமிழகத்தின் அமைதியை குலைக்க முயல்கிறார் என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணியில் திமுக வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்தது இந்த பேரணி.

குடியுரிமை சட்டம் குறித்து தமிழகத்தினர் கவலைப்பட தேவையில்லை என கூறி வந்த அதிமுகவினர், திமுகவின் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் திமுகவின் இந்த பேரணி குறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் “அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தின் நிம்மதியை குலைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் பேரணி நடத்துகிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments