ஒரே நாளில் போராட்டம் நடத்தும் ஸ்டாலின் – யாகம் நடத்தும் எடப்பாடியார்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (20:36 IST)
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை நாளாக நாளாக மோசமாகி கொண்டே போகிறது. ஒவ்வொரு நாள் காலையும் மக்களுக்கு பெரும் போராட்டமாகவே விடிகிறது. ஒவ்வொரு நாள் இரவும் நாளைக்கு தண்னீர் கிடைக்குமா என்ற கேள்வியோடே முடிகிறது.

இந்நிலையில் தமிழகமெங்கும் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் பேசினார். அடுத்த கட்டமாக மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் யாகம் நடத்த சொல்லி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் சென்னையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற உள்ள யாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்தான் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்ய வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் போராட்டம் என்னும் ஆயுதத்திற்கு எதிராக மக்களை திசைதிருப்ப செண்டிமெண்டலாக பக்தியின் என்னும் ஆயுதத்தை எடப்பாடியார் கையிலெடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் ஒரு பக்கம் தண்ணீருக்கு போராட்டமும், மறுபக்கம் மழை வேண்டி யாகமும் நடைபெறுவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன செய்தாலும் மக்களிடம் எஞ்சி நிற்கும் ஒரே கேள்வி ‘எப்போ தண்ணீர் கிடைக்கு?’ என்பதாகதான் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments