Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 மே 2018 (12:24 IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக தலைமை செயலகம் வந்த ஸ்டாலினுக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைமைச்செயலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அருகே மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். 
 
அப்போது போலீசாரின் வாகனத்தில் அமர்ந்த படி பேட்டி கொடுத்த ஸ்டாலின் “ துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது செயல்படாத அரசாக இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தூத்துக்குடி டிஜிபி இருவரும் பதவி விலக வேண்டும். முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி விலகும் வரை திமுகவின் போராட்டம் தொடரும்” என ஸ்டாலின் பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments