Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் இந்த பக்கம் மீன் பிடிக்க வரக்கூடாது! – தமிழக மீனவர்களை துரத்திய இலங்கை!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (11:01 IST)
வங்க கடலில் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை அரசு அவர்களை தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர் சம்பவங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்கள் பலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியதுடன், அவர்கள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இனி இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments