Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

எத்தனையாவது அலை வந்தாலும் எதிர்க்கும் வலு உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 4 ஜூலை 2021 (08:49 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் புதிய அலை வந்தாலும் எதிர்கொள்ளும் திறன் தமிழகத்திற்கு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. எத்தனை அலை வந்தாலும் அதை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தடுப்பூசிகளை முழுமையாக வழங்கவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் பொது இடங்களில் இரட்டை மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் என்ன விலை?