Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புச்செழியனை பிடிக்க புதிய டெக்னிக்: தனிப்படை போலீஸின் வியூகம்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:26 IST)
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அன்புச்செழியன் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்புச்செழியன் கேரளா அல்லது வட இந்தியாவில் தங்கியிருக்கலாம் என்று வெளிவந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் வலைவீசி அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாகவுள்ள அன்புச்செழியனுக்கு அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் உதவி வருவதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில் அந்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் புதிய வியூகம் அமைத்துள்ளனர். அந்த உறவினர் தேனி அல்லது இராமநாதபுரம் பகுதியில் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இரண்டு நகரங்களுக்கும் இரண்டு தனிப்படைகள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அன்புச்செழியனை பிடிக்க பெங்களூர், ஐதராபாத், மதுரை ஆகிய பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தேடி வருவதாக கூறப்படுவதால் வெகுவிரைவில் அன்புச்செழியன் பிடிபடுவார் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments