சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (10:02 IST)
புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மக்கள் சென்னை திரும்ப 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் சேர்த்து 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று புத்தாண்டுடன் இந்த விடுமுறைகள் முடிவடைந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விடுமுறைகளுக்காக மக்கள் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்றுள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் சென்னை புறப்பட உள்ளனர். அதனால் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமான பேருந்துகளுடன், 500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments