Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 6 நாடுகளில் இருந்து வந்தால் கொரோனா சான்றிதழ் கட்டாயம்! – இந்திய அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (09:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பலருக்கும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா அதிகம் பரவும் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்டவேண்டியது அவசியம் என்றும், சான்றிதழ் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்குள்ளாக பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments