நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:41 IST)
எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தால் குறைந்த அளவிலான சிறப்பு ரயில்களே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்களை வழக்கமான ரயில்களாக இயக்க ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த கட்டமாக நவம்பர் 25 முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ், மக்களூர் – கோவை எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், காரைக்குடி – எழும்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், சென்னை செண்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், பாலக்காடு – நெல்லை எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றில் முன்பதிவில்லா பெட்டிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments