Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன் – தானாகவே போலிஸில் சரண் !

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (08:10 IST)
கிருஷ்ணகிரி அருகே தாய் தன்னைக் கேட்காமலேயே நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன் அவரைக் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வம் மற்றும் பாக்யலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சதிஷ் குமார் என்ற மகன் உள்ளார். செல்வம் சில மாதங்களுக்கு முன்னதாக இறந்துள்ளார்.

இதையடுத்து கேரளாவில் இருந்த மகனுக்கு தெரிவிக்காமல் நிலத்தை விற்ற பாக்யலட்சுமி அதைவைத்து கடனை அடைத்துள்ளார். இதை அறிந்து கோபமான சதீஷ் தாயிடம் தகராறு செய்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர் மார்ச் 14 (நேற்று) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தனது தாயைக் கட்டையால் அடித்தே கொலை செய்துள்ளார்.

இதன் பின்னர் தானாகவே சென்று போலிஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments