கம்ப்யூட்டர் வெடித்ததில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:40 IST)
மதுரையை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் கம்ப்யூட்டர் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அனுமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுனாதன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், தனது தந்தை கடந்த வருடம் உயிரிழந்ததையடுத்து, இவர் மேலூரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். 
 
நேற்று ரகுனாதன் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ரகுனாதன் தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினர் ரகுனாதனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரகுநாதன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments