Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:30 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமீபத்தில் தான் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென  நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.2 என பதிவாகி உள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த நில அதிர்வால் எந்த விதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments