மீண்டும் மன்னிப்பு கோரிய சித்தார்த்!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (12:04 IST)
சென்னை காவல்துறையினரின் விசாரணையின் போது நடிகர் சித்தார்த் மீண்டும் மன்னிப்பு தெரிவித்தார். 
 
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த நடிகர் சித்தார்த் அவரிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த் தான் டுவீட்டில் பதிவு செய்தது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார். 
 
மேலும் அப்போது நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணைய  நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். 
 
இந்நிலையில் சென்னை காவல்துறையினரின் விசாரணையின்போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு தெரிவித்தார். சர்ச்சை கருத்துக்கு எதிராக எதிர்ப்பு எழுந்த நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கோரியிருந்தார். நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை மகளிர் தேசிய ஆணையத்திற்கு சென்னை காவல்துறை அனுப்பி வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கிங் மேக்கர் இல்லை.. நிச்சயம் ஆட்சி அமைப்பேன்: விஜய் முதல்முறையாக ஊடகத்திற்கு அளித்த பேட்டி..

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.. செங்கோட்டையன்

கல்லூரிகளில் கல்விக்கட்டணம் ரத்து.. இலவச கல்லூரி கல்வி வழங்கும் முதல் மாநிலம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 4.25 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய நிலையில் எத்தனை பேர் பாஸ்?

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments