Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சேவின் சந்ததியினரால் சட்டம் ஒழுங்கை சீர்குலைகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு..!

Mahendran
செவ்வாய், 30 ஜனவரி 2024 (17:14 IST)
கோட்சேவின் சந்ததியினரால் கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.  
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 108 அடி உயர கம்பம் நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
தேசியக்கொடியை தவிர வேறு கொடியேற்ற அனுமதி இல்லை என போலீசார் அதை அகற்றிய போது பெரும் பிரச்சனையாகியது என்பதும் இதனால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அனுமன் கொடி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் இன்று மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா ’மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments