Publish Date: Sat, 02 Nov 2024 (15:19 IST)
Updated Date: Mon, 20 Jan 2025 (18:06 IST)
தனது சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த நண்பனை இளைஞர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரமக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடியில் சரவணன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், சரவணன் சகோதரியை முத்துக்குமார் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சரவணன், சகோதரி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், முத்துக்குமாருக்கும் அவருக்கும் திடீரென திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்து தனது நண்பரை கண்டித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து இந்த உறவு நீடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து முத்துக்குமாரை சரமாரியாக அரிவாளில் வெட்டி கொலை செய்துள்ளார். இதை தடுக்க வந்த முத்துக்குமாரின் தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரவணனை கைது செய்த நிலையில், இந்த கொலைக்கு தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.