Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”விக்ரம் லேண்டரை நான் இப்படித் தான் கண்டுபிடித்தேன்”.. விளக்கும் மதுரை எஞ்சினியர்

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (12:51 IST)
மதுரையை சேர்ந்த எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன், தான் லேண்ட்ரை எவ்வாறு கண்டுபிடித்தார் என விளக்கியுள்ளார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன், விக்ரம் லேண்டாரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சுப்ரமணியன் லேண்டரின் பாகங்களை எவ்வாறு தான் கண்டுபிடித்தார் என விளக்கியுள்ளார்.

நாசா வெளியிட்ட நிலவின் புதிய மற்றும் பழைய புகைப்படங்களை ஆய்வு செய்த சுப்ரமணியன், பல புகைப்படங்களிலும் ஒரு சிறிய  புள்ளியை தவிற வேறெந்த மாற்றங்களையும் அவர் கண்டறியவில்லை.

இந்நிலையில் அந்த புள்ளியே விக்ரம் லேண்டாரின் பாகங்களாக இருக்கும் என அக்டோபர் 3 ஆம் தேதி நாசாவை குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார். மேலும் ஈமெயிலும் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் நாசா தொடர்ந்து பல புகைப்படங்களை ஆய்வு செய்தும், சுப்ரமணியனின் தகவல்களை கொண்டும் ஆராய்ச்சி செய்த பின்னர் விக்ரம் லேண்டாரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து சண்முக சுப்ரமணியம் “லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே நான் தொடர்ந்து ஆய்வு செய்தேன்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments