Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியன் கைது

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (08:18 IST)
சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகும் வேளையில் திருவண்ணாமலையில் ஒரு அயோக்கியன் சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவண்ணாமலை தானிப்பாடியை சேர்ந்த குரு(17) என்ற சிறுவன் பன்னீர் செல்வம்(36), என்பவரிடம் தனக்கு வேலை வாங்கித்தரும்படி கூறியுள்ளான். பன்னீர்செல்வமும் குருவிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவனை பைக்கில் அழைத்துச் சென்றார்.
 
பைக்கை மறைவான இடத்தில் நிறுத்திய பன்னீர்செல்வம், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்துபோன சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினான்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் பன்னீர் செல்வத்தை கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்