Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசிய கொடூரர்கள் கைது

3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசிய கொடூரர்கள் கைது
, திங்கள், 23 ஜூலை 2018 (15:55 IST)
இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ஹோம் பார்கைன்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு ஒரு பெண் தனது 3 வயது மகனுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அந்த பிஞ்சுக் குழந்தையின் மீது ஆசிட் வீசினர்.
 
இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அங்கிருந்தவர்கள் அந்த 3 கொடூரர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை கைது செய்து ஏன் இப்படி செய்தார்கள் என விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் கைகளில் ரத்தத்தின் கறை: மம்தா பானர்ஜி ஆவேசம்!