Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு.. நீதிபதி அல்லி உத்தரவு

Siva
புதன், 10 ஜூலை 2024 (20:42 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி காவல் 45வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வாதங்கள் தொடங்காத நிலையில் வரும் 12ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

செந்தில் பாலாஜியின் வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் 45 வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments