Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவை இந்தியாவே திரும்பி பார்க்கும்: செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (12:00 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை இந்தியாவே திரும்ப பார்க்கும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோட்டில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பாக பெண்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
 
எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தல், ஜெயலலிதாவுக்கு மருங்காபுரி தேர்தல் போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்றும் இந்த தேர்தலை முடிவை இந்தியாவை திரும்பி பார்க்கும் அவர் தெரிவித்தார். 
 
எத்தனை தடைகள் வந்தாலும் 50,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவார் என்றும் இதனை அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments