Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்ட்ரியாவை நிர்வாண புகைப்படம் எடுத்தாரா செல்வராகவன்? - டிவிட்டரில் சுசித்ரா

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (14:59 IST)
நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவை, இயக்குனர் செல்வராகவன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்தார் என பாடகி சுசித்ரா டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.


 

 
கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எனக்கூறி, சின்னத்திரை டிடி, தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்கானது. தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனுக்கு நடிகையும், பாடகியுமான ஆண்டிரியா அனுப்பியதாக ஒரு மெயிலை அவர் பதிவு செய்துள்ளார். ஒரு திரைப்படத்திற்காக ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்த செல்வராகவன், அவரை வைத்து ஒரு நிர்வாண காட்சியை எடுத்துள்ளார். ஆனால், கூறியபடி ஆண்டிரியாவை அந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை. அந்த கதையைத்தான் தற்போது  ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற பெயரில் தற்போது அவர் இயக்கு வருகிறார்.
 
அந்த வீடியோவை, செல்வராகவனே எடிட் செய்ய வேண்டும் எனவும், மற்ற யாரும் எடிட் செய்தால் அசிங்கமாகிவிடும் என ஆண்டிரியா அந்த மெயிலில் கூறுவது போல் உள்ளது. மேலும், தனக்கு பணமே கொடுக்காமல், நிர்வாணப் புகைப்படம் எடுத்ததால், அந்த வீடியோவை தன்னிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்  எனவும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இப்படி தினமும், நடிகர், நடிகைகள் பற்றிய ரகசியங்களை சுசித்ரா டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன் டிவிட்டர் கணக்கை தயவு செய்து நிறுத்தி கொள்ளுமாறும், தான் நடிகர், நடிகைகளை பற்றி எப்போதும் பேசியதில்லை எனவும் சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்