Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - பதிலளிக்காமல் சென்ற செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (08:55 IST)
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன் இந்த வழக்கு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரைவு திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளிக்காத செல்லூர் ராஜூ ஏற்கனவே என்னை ரஜினி விஷயத்தில் மாட்டி விட்டீர்கள். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க போவதில்லை என கூறியபடி சென்றுவிட்டார். பேச வேண்டிய விஷயத்திற்கு பேசாமல், ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு மெனக்கெட்டு பேசுவதே ஆளும் கட்சியினரின் செயல் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments