Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போடான்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம்! – ஃபேமிலிமேன் தொடர் குறித்து சீமான் கருத்து!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (11:58 IST)
சர்ச்சைக்குரிய ஃபேமிலிமேன் தொடர் ஓடிடியில் வெளியான நிலையில் அதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான ஃபேமிலிமேன் தொடர் நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஃபேமிலிமேன் தொடர் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அந்த தொடரில் ஐஎஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஈழ போராளிகளை தொடர்பு படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி பட்டேன். ஆப்ரகாம் லிங்கன் சொல்வது போன்று ’குற்றம் குறை கூறுபவர்களை புறந்தள்ள கற்றுக்கொள்’ங்கிற மாதிரி “போடா’ என சொல்லிட்டு போய்விடுவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments