Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஸ்ட் போட்டு தூக்குவேன்!: பிரச்சாரமா? மிரட்டாலா? – சீமானுக்கு குவியும் கண்டனங்கள்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (13:58 IST)
நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் சீமான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தனது கட்சி கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டல் விடுக்கும் தோனியிலும் சீமான் பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்ற முறை தமிழ் தெரியாதவர்களை கட்டி வைத்து அடிப்பேன் எனவும், ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் எனவும் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவீரர் நாளுக்காக மதுரை ஒத்தக்கடையில் பேசிய சீமான் “என் தம்பிகளை பிடித்து சிறையிலடைப்பவர்களுக்கும், நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் எல்லாரையும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வருவதற்குள் நீங்கள் இறதுவிடுங்கள். இல்லையென்றால் உங்களை கொன்ற பழிக்கு நான் ஆளாக வேண்டியிருக்கும்” என பேசியுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நேரடியாக சீமான் கொலை மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரச்சார மேடைகளில் மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments