Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளராத நாம் தமிழர்: 2021-க்கு கட்டம் கட்டிய சீமான்!!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (17:25 IST)
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் சரிசமமாக களமிறக்கப்படுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார். 
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக கணிசமான வித்தியாசத்தில் திமுகவை விட குறைவான இடங்களை பெற்றுள்ளது. ஒன்றிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.
 
இந்த தோல்விக்காக துவண்டுவிடாமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, லோக்சபா தேர்தலில் பெற்ற 4% என்ற வாக்கு விகிதம், தற்போது நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10% வாக்குகளாக அதிகரித்துள்ளது. 
 
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் சரிசமமாக களமிறக்கப்படுவார்கள். 234 தொகுதிகளில் தலா 117 ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு நம் தமிழர் போட்டியிட வாய்ப்பு வழங்கும். போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் இந்த மாதம் அறிவிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments