Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்; திரும்ப வந்த மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி! – சீமான் கோரிக்கை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (09:04 IST)
உக்ரைனில் மூண்ட போரால் தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்ய வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வந்தடைந்துள்ளனர். உக்ரைனில் போர் சூழல் நிலவுவதால் அவர்களது படிப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உக்ரைனிலிருந்து மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களது படிப்பு பாதிக்கப்படா வண்ணம் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனிப்பொழிவுக்கு பதிலாக சோப்பு நுரை.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய நிர்வாகம்..!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

அமெரிக்க விமான விபத்தில் 67 பலியான சம்பவம்.. 100 ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ்..!

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments