Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஜெயலலிதாவும் 40 திருடர்களும்”.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (11:43 IST)
ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் குறித்தும், சர்ச்சையாக பேசியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்ககூடியதாக பேசுதல், வன்முறையை தூண்டும்  வகையில் பேசுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க சீமானை நேரில் ஆஜராகும்படி, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக தூத்துக்குடி வந்த சீமான், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ”அலிபாபாவும் 40 திருடர்களும் போல, அம்மாவும் 40 திருடர்களும் என்பது போல் தமிழக அமைச்சர்கள் உள்ளனர்” என அதிமுக அமைச்சர்கள் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும். “தற்போது அம்மா இல்லை, 40 திருடர்கள் மட்டுமே உள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

எப்போதும் தமிழக அமைச்சர்களை குறித்து விமர்சித்து வரும் சீமான், தற்போது அவர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments