Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

Senthil Velan
திங்கள், 17 ஜூன் 2024 (17:58 IST)
காஞ்சிபுரத்தில் பின் காவலர் ஒருவருக்கு  அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி புரிந்து வருபவர் டில்லி ராணி. இவர் பணி முடிந்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். 
 
இதில் டில்லி ராணியின் வலது கை பகுதியில் இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் டில்லி ராணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!
 
குடும்ப தகராறில் டில்லிராணியை அவரது கணவரே தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவன்,  மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக டில்லிராணி பிரிந்து வாழும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments