லீவ் விடாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (08:54 IST)
சென்னையில் உத்தரவை மீறி இன்று திறக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
எனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
ஆனால் ஆட்சியரின் உத்தரவையும் மீறி சென்னையில் சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்குவதாக புகார் கூறப்பட்டது. 
 
இதனையடுத்து இது குறித்து பேசிய ஆட்சியர் உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மழையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எதாவது ஆனால் பள்ளி நிர்வாகம் தான் பதில் கூற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments