Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (13:10 IST)
தமிழகத்தில் தற்போதைக்கு 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கபடாமல் இருந்து வந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ”பள்ளிகள் திறப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இப்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments